Wednesday, December 31, 2014

புத்தாண்டின் முதல் கவிதை


 இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களுடன் இன்று 
முதல் கவிதை துவக்கம்.  
மேன் மேலும் பதிவுகள் போட உங்கள் அனைவரின் (முக்கியமாக கோபு அண்ணா) வாழ்த்துக்கள் எனக்கு அவசியம் நட்புக்களே.

வாழ்க வளமுடன்.



நாய்க்குட்டி,
ஒட்டகச் சிவிங்கி,
அவளின் மனம் கவர்ந்த
குட்டிக்கரடி, 
பந்து,
இன்னும் பல
பொம்மைகள் இருந்தாலும்
அவள் இலக்கு
என்னமோ
அடுக்களை தான்,
அடுக்களையில் இருக்கும்
அஞ்சரைப் பெட்டிதான்.

கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணில் மண்ணைத் தூவி
கலப்படம் செய்து விட்டாள்

 

பாட்டிக்கு தாளிக்க
ஒவ்வொன்றாய் எடுக்கும்
சிரமம் வேண்டாம் என்றோ?

கண்டிக்க மனம் இல்லாமல்
கண்டிக்க நினைத்தாலும்
இரு கன்னம் குழிய சிரித்து
மயக்கி விடுகிறாள்

என் இரு கன்னத்தில்
முத்தமிட்டு
கோப சுரத்தின்
வேகத்தைக் குறைத்து விடுகிறாள்.

கண்டிப்பதெங்கே
ரசிக்கவே செய்கிறேன்
அவள் செய்யும்
குறும்புகளை