நன்றி என்று ஒற்றைச்
சொல்லாக சொல்லி முடிக்க முடியாது. முகப் புத்தகத்திலும்,
கைப்பேசி செய்தியிலும், தொலை பேசியிலும் என் அறுபதாவது பிறந்த நாளுக்கு (29.05.2015) வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்
மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றி.
என்னுடைய 60வது
பிறந்த நாளுக்கு என் கணவரின் அன்புப் பரிசு.
என் மகன், மகள்,
மருமகள், மருமகன், லயாக்குட்டி எல்லாரும் சேர்ந்து பரிசளித்த தங்க மோதிரம்
என் அம்மா கொடுத்த
500 ரூபாய்க்கு (கண்டிப்பாக ஏதாவது வாங்கிக் கொள் என்ற அன்புக் கட்டளைக்கேற்ப) நான்
வாங்கிக்கொண்ட இரண்டு பருத்திப் புடவைகள்.
பக்கத்து வீட்டு
உமா (நான் மிகவும் மதிக்கும், நேசிக்கும் பெண்மணி) அளித்த அன்புப் பரிசு.
மாமியார் கொடுத்த
100 ரூபாயை அப்படியே வைத்திருக்கிறேன்.
இது எல்லாவற்றையும்
விட எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லாத ஒரு பரிசு எங்கள் பேத்தி லயாக்குட்டியின் அன்பு
முத்தங்கள். நான் அவளிடம் எனக்குக் கிடைத்த
பிறந்த நாள் பரிசிலேயே மிகச் சிறந்தது அவளின் முத்தங்கள் தான் என்று சொன்னேன். அன்று
முழுவதும் அவள் ஐந்து நிமிடங்களுக்கொரு முறை ‘பாட்டி, உனக்கு எது BEST GIFT’ என்று கேட்டாள். ‘உன் முத்தங்கள்தான்’ என்று சொன்னதும் ரசித்து,
ரசித்து சிரித்தாள்.
இதை விட என்ன பெரியதொரு
பரிசு இருக்கப் போகிறது.
GOD IS SO GREAT
60 முடிந்து
61ல் மகிழ்ச்சியாகக் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் உங்கள் அன்பான வாழ்த்துக்களுடன்.